சென்னை செப், 28
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 30ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக தவாக தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். காவிரி எங்கள் உரிமை முழக்கத்தை முன்வைத்தும் தமிழக அரசு முதல்வர் ஸ்டாலினை அவமதிக்கும் கன்னட அமைப்புகளை கண்டித்தும் பேரணி செல்ல உள்ளதாக கூறிய வேல்முருகன் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.