நெல்லை ஆகஸ்ட், 20
நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவிகள் போதைப்பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் சிறப்பு விருந்தினராக பாளை உதவி ஆணையர் பிரதீப் கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் முருகவேல், ஆசிரியர்கள், காவல்துறையினர்களுடன் சேர்ந்து மாணவ-மாணவிகளும் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிெமாழி ஏற்றனர். பாளை குற்றப்பிரிவு ஆய்வாளர் சண்முக வடிவு மற்றும் துணை ஆய்வாளர் சிவகலை மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, துணை ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.