புதுடெல்லி செப், 21
இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளுக்கு எஸ்பிஐ பங்குதாரராக இணைந்துள்ளது. அதன்படி 2023 முதல் 26 வரையிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குதாரர்களின் ஒருவராக இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ லைஃப் 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் செப்டம்பர் 22 இல் இருந்து தொடங்கும்.