Spread the love

தர்மபுரி ஆக, 27

சரக அளவில் நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கேரம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.

பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயது வரம்பு அடிப்படையில் U-17 ஒற்றையர் பிரிவில் செங்கொடி முதலிடமும், கவிசரண் இரண்டாமிடமும், U-14 இரட்டையர் பிரிவில் கவிசரண் மற்றும் சரன்பாபு முதலிடமும்பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். U-17 ஒற்றையர் பிரிவில் தாஸ் இரண்டாமிடமும், U-19 ஒற்றையர் பிரிவில் சச்சின்தாசன் முதலிடமும்பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் முருகேசன் , செயலாளர் பிரு ஆனந்த் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *