சென்னை ஆக, 12
தமிழகத்தில் MBBS, BDS, படிப்புகளுக்கான கலந்தாய்வில் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கு பொதுப்பிரிவு கலந்தாய்வு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும் என அறிவிக்கப்பட்டது.