சிவகங்கை ஜூலை, 25
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பகுதிகளில் அதிகளவில் அரிவாள் தயாரிக்கப்படுவது வழக்கம். ஆடி, புரட்டாசி, சித்திரை மாதங்களில் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அரிவாள்களும் தயாரிக்கப்படுகின்றன பதினெட்டாம்படி கருப்பணசாமிக்காக 18.5 அடி உயர அரிவாள்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆடி திருவிழா என்பதால் அரிவாளுக்கு அமோக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.