ராய்கட் ஜூலை, 23
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களுக்கான எண்ணிக்கையை 27 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன 86 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.