சென்னை ஜூலை, 22
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மெரினாவில் போராட்டம் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு பெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து மெரினா கடற்கரையில் கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.