சிக்கிம் ஜூன், 19
வடக்கு சிக்கிமில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதில் சுங்தாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300 சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர். தற்காலிக பாலத்தை அமைத்து அவர்களை பத்திரமாக இந்திய ராணுவத்தினர் முகாமில் தங்க வைத்துள்ளனர். கடந்த வாரம் இதே இடத்தில் நிலச்சரிவில் சிக்கிய 2000 பேரை ராணுவத்தினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.