புதுடெல்லி ஜூன், 13
பிபோர்ஜோய் புயல் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். வரும் 15 ம் தேதி குஜராத் அருகே புயல் கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக அங்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. புயலின் தாக்கம் மும்பையிலும் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.