ஆப்ரிக்கா மே, 7
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 176 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திங்கட்கிழமை துக்க தினம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 176 பேர் பலியாகியுள்ளதால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.