புதுடெல்லி மே, 4
ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளை நீதிபதி ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணை ஜனவரியில் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஜோசப் வரும் ஜூன் 16ம் தேதி ஓய்வு பெறுவதாலும், மே 20 முதல் நீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்க உள்ளதாலும் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது.