சென்னை ஏப்ரல், 7
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பது எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ் ஆவணப்படம் மூலம் ஆஸ்கார் வென்ற பொம்மன், பொள்ளி தம்பதியை சந்திப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அவரது வருகையை ஒட்டி சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 15 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.