சேலம் ஏப்ரல், 2
தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் பகுதியில் லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என வலியுறுத்தி வருகிறோம். பஞ்சாப் மாநில அரசு போல், தமிழ்நாட்டு அரசும் சுங்க கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.