சிவகாசி மார்ச், 27
ராகுல் காந்திக்கு எதிரான கைது நடவடிக்கையின் மூலம் பாரதிய ஜனதா கட்சி தனது புதைகுழியை தோண்டி கொண்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். சிவகாசியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர், ராகுல் பொதுவெளியில் கேட்கும் கேள்விகளுக்கு மோடி பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதில் கூறியே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.