சென்னை மார்ச், 14
தமிழகம் முழுவதும் புதுச்சேரியில் பிளஸ் ஒன் பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 7,88,064 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதில் 5,835 பேர் மாற்றுத்திறனாளி மாணவர்கள். 125 சிறைவாசிகள், 538 பேர் தனித்தேர்வர்கள் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3,184 மையங்களில் புதுச்சேரியில் 40 மையங்களிலும் பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.