அரியலூர் மார்ச், 14
நீட் தேர்வுக்கு போராடி தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் பெயர் அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய அரங்குக்கு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவமனையில் 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்திற்கு அனிதா பெயர் சூட்டப்பட உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன்னுயிரை மாய்த்து கொண்ட அனிதாவுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.