Spread the love

திருவள்ளூர் ஜன, 29

மீஞ்சூர் அடுத்த நந்தியம் பாக்கம் ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இவர்களின் ஜாதி சான்றிதழ், இருப்பிடம், அடிப்படை தேவைகள், உள்ளிட்டவைகள் குறித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அப்போது 60 குடும்பம் வீடுகள் இல்லாதது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக அதே பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதாகவும் அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் அங்கன்வாடி மையத்தை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *