Spread the love

செங்கல்பட்டு ஜன, 20

திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள தெற்கு மாடவீதி, கச்சேரி சந்து தெரு இணைப்பு சாலை, பேருந்து நிலைய இணைப்பு சாலை, விளம்பி வினாயகர் கோயில் தெரு, வேம்படி வினாயகர் கோயில் தெரு, ஏரிக்கரை 1வது தெரு, 2வது தெரு ஆகிய பகுதிகளில் பழைய சேதமடைந்த சாலைகளை அகற்றிவிட்டு புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்க பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து புதிய சாலை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணைத்தலைவர் பரசுராமன், வார்டு உறுப்பினர் மீனாகுமாரி சந்திரன் ஆகியோர் முன்னிலையில், தெற்கு மாடவீதியில் சாலை அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் எடுக்கும் பணி நடந்தது. குடிநீர் குழாய்கள், மின் இணைப்புகள், கழிவுநீர் இணைப்புகள் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *