ஈரோடு ஆகஸ்ட், 12
பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் பக்தர்கள் புதிய பூணூல் அணிந்து கொள்வது வழக்கம்.
அதன்படி நேற்று ஆவணி அவிட்டம் விழா காரை வாய்க்கால் சுயம்பு நாகர் கோவிலில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனர்.
இதையொட்டி நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.