Spread the love

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 12

காஞ்சிரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகிறது.

இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு நேர்முக தேர்வை நடத்துகின்றது. பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12 வது மற்றும் 10 ம் வகுப்பு படித்தவர்கள், ஆய்வக உதவியாளர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களுடன் கலந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *