Spread the love

அரியலூர் ஜன, 9

ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துதுறை, அரியலூர் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய ஆலோசகர் பிரியா, சமூகப்பணியாளர் வைஷ்ணவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் முத்துபிரபாகரன் ஆகியோர் ஒவ்வொரு தலைப்பிலும் விரிவுரையாக பேசி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக நர்சிங் கல்லூரி பேராசிரியர் ஆம்பிசா வரவேற்றார். இறுதியில் நர்சிங் டியூட்டர் மீனாட்சி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *