அரியலூர் ஜன, 7
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக 2,46,210 முழுக்கரும்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் உள்ள அலுவலர்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பின்தரம், உயரம் ஆகியவை வேளாண்மைத்துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது. அதன் அடிப்படையில் சுந்தரேசபுரம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்க உள்ள கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது,மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.