Spread the love

காஞ்சிபுரம் ஜன, 7

திருவள்ளூர் மாவட்டத்தின் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட மன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆய்வை தொடங்கினார்.

இந்த ஆய்வின் போது ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய குழு துணைத்தலைவர் பர்கத்துல்லாகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதிநாதன், வெங்கடேசன், மேலாளர் ஸ்ரீராம் காந்தி மற்றும் பலருடன் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *