Spread the love

திருப்பத்தூர் ஜன, 6

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையம் பல்வேறு மாநிலங்களை இணைக்கக்கூடிய முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பணிகளுக்காகவும் வியாபாரம் சம்பந்தமாகவும் பயணிகள் ரயில் மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறை, கழிவறை, குடிநீர் வசதி, கழிவு நீர் வசதி, பயணிகளின் நட மேடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாமல் பின் தங்கிய நிலையில் இருந்து வருகிறது.

இதுகுறித்து அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என ரெயில் பயணிகளும் பொது மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அண்ணாதுரை பாராளுமன்ற உறுப்பினர், ஜோலார்பேட்டை தேவராஜி சட்ட மன்ற உறுப்பினர், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *