திருப்பத்தூர் பிப், 4
ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் ஆட்சியராகவும், சமூக நலத்துறை இயக்குனராக இருந்த வளர்மதி ராணிப்பேட்டை ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.