திருப்பத்தூர் ஜன, 16
ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 38 ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதில் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரபுரம் ஊராட்சி பணியாண்டபள்ளியில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சமத்துவபுரத்தில் உள்ள அனைத்து மக்களும் பொங்கல் பானை வைத்து சமத்துவ பொங்கல் வைத்தனர்.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் மற்றும் சுகாதார பொங்கல் விழாவில் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே. பிரபாகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது பணியாண்ட பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சமத்துவ பொங்கல் குறித்து நடத்தப்பட்ட பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டியில் பங்கேற்றனர்.