திருப்பத்தூர் டிச, 31
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 42,081 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,548.04 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் உதவிகளை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 650 சுய உதவிக்களுக்கு ரூ.42.65 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா வழங்கினார். இவ்விழாவில் திருப்பத்தூர் நல்லதம்பி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார் திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் உமா மகேஸ்வரி வரவேற்புரை யாற்றினார்.
இவ்விழாவில் மாவட்ட பால்வளத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன், உதவி திட்ட அலுவலர்கள் வேதநாயகம், முருகேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.