Spread the love

திருப்பத்தூர் டிச, 26

திருப்பத்தூர் நகராட்சி டி.எம்.சி. காலனி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 150 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் திருப்பத்தூர் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக கடந்த மாதம் இந்த பகுதியில் உள்ளவர்களை காலி செய்ய நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அப்போது திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த மாதம் 25 ம் தேதி காலி செய்வதாக எழுதிக் கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் நேற்று நகராட்சிநகர ஆய்வாளர்பொக் லைன் எந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்தபொதுமக்கள் திருப் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *