Spread the love

வேலூர் ஜன, 6

வேலூர் மாவட்டத்தில் பெயர் சேர்த்தல் நீக்கல் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்காக கடந்த சில மாதங்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ஏராளமான இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மனு அளித்தனர். இதேபோல் பெயர் நீக்கல் முகவரி மாற்றத்திற்கும் மனு அளித்து இருந்தனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது வாக்குச்சாவடி அலுவலர்கள் முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

இதையடுத்து வாக்காளர் பதிவு அலுவலர் விசாரணை முடித்து வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *