Spread the love

கன்னியாகுமரி ஜன, 5

குமரி மாவட்டத்தில் போதை பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களும் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்தில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. எனவே மாணவர்கள் போதை பழக்கத்திற்கு சென்று விடாமல் தடுக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. புகார் பெட்டி இந்தநிலையில் போதை பொருட்கள் பயன்பாடு தொடர்பாக புகார் அளிக்க பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க மாவட்ட காவல் துறை முடிவு செய்தது.

அதன்படி முதற்கட்டமாக நேற்று எஸ்.எல்.பி. அரசு பள்ளி, கவிமணி பள்ளி மற்றும் 3 தனியார் பள்ளிகள் என மொத்தம் 5 பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.எல்.பி. அரசு பள்ளியில் புகார் பெட்டியை காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் நேரில் சென்று வைத்தார். பின்னர் அதுதொடர்பாக மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *