தருமபுரி ஜன, 5
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலர்க ளுக்கான ஆய்வுக்கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் செயல்ப டுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் முதியோர் உதவித் தொகைகளையும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.720- மதிப்பிலான தென்னங்கன்றுகளையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 56 பயனாளிகளுக்கு ரூ.25.29 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடியும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.1.13 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும் என மொத்தம் 203 பயனாளிகளுக்கு ரூ.87.22 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தருமபுரி நகர் மன்றத் தலைவர் லட்சுமி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.