Spread the love

தர்மபுரி ஜன, 1

தர்மபுரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

அதன்படி இந்த ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சாந்தி வரவேற்றார்.

இதில் மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் பாஸ்கர், கால்பந்து விளையாட்டு சங்கத்தலைவர் ஆனந்தன், இறகுப்பந்து விளையாட்டு சங்கத்தலைவர் கோபி உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *