மேகாலயா ஜன, 2
மேகாலயா மாநிலம் நாங்போ பகுதியின் வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் நள்ளிரவு 11 28 மணி அளவில் திடீரென்று நில அதிர்வு உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது இதன் மூலம் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மேகாலயாவில் ஏற்பட்டுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.