Spread the love

தேனி டிச, 31

ஆண்டிப்பட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலூத்துஊராட்சியில் தேவராஜ் நகர் அமைந்துள்ளது. இந்நிலையில் தேவராஜ் நகர் பகுதியினை சேர்ந்த மூன்றாவது வார்டு பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு பேவர் பிளாக் அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற ஊராட்சிமன்ற தலைவர் உடனடியாக தேவராஜ் நகர் 3வது வார்டு பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் அமைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில் தற்பொழுது பேவர் பிளாக் அமைக்கும் பணியினை ஊராட்சி மன்ற தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *