தென்காசி டிச, 31
கடையம் அருகே ராஜாங்கபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கோவிந்தபேரி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
முகாமில் மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் மருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலுதவி, ஊட்டச்சத்து ,சினை பரிசோதனை நடத்தினர். தொடர்ந்து பசுக்களுக்கு சினை ஊசி செலுத்தப்பட்டது. ஆடுகளுக்கும் குடற்புழு நீக்கம் மருந்து கொடுக்கப்பட்டது.