விழுப்புரம் டிச, 31
தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். செயல் தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாவட்டச்செயலாளர் பாலச்சந்தர் வரவேற்றார்.
மேலும் டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் வீரப்பன், ஒன்றிய தலைவர்கள் பீமாராவ், ராஜாங்கம், மாவட்ட துணைத்தலைவர் குமார் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், மாநிலச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜாமணி நன்றி கூறினார்.