Spread the love

நெல்லை டிச, 31

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் முத்துக்கிருஷ்ணன், லட்சுமி வெங்கடாச்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நிர்வாகிகள் பழனி, ராஜன், நடராஜன், சுதந்திரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங் களை சேர்ந்த ஓய்வு பெற்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர். 7 ஆண்டுகளாக வழங் கப்படாமல் உள்ள பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும். பணியில் போது உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்தி னருக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும்.நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், மறுக்கப்பட்டு வரும் சலுகைகளை உடனடி யாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

பின்னர் அவர்கள் திடீரென வண்ணார் பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி மறியலில் ஈடுபட்டதாக 400 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *