Spread the love

மயிலாடுதுறை டிச, 26

செம்பனார்கோயில் அருகே அரங்கக்குடி-வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர் அரவிந்தநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன், ஒன்றியக்குழு உறுப்பினர் மஜினா பர்வீன் ஷேக் அலாவுதீன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அர்ஷத் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல்அன்சாரி வரவேற்றார். இதில் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர். இந்த முகாமில் இயற்கை உணவுகள், பாரம்பரிய உணவுகள், குழந்தை களுக்கான ஊட்டச்சத்து தரக்கூடிய உணவுகள் குறித்து விளக்கும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டி ருந்தது. இதில் ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், அரங்கங்குடி குட்டி ராஜா மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *