Spread the love

மயிலாடுதுறை டிச, 24

சீர்காழியில் மாணவிகள் விடுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். கண்காணிப்பு அலுவலர் ஆய்வு சீர்காழி தென்பாதி இந்திரா நகரில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவி விடுதியை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் திட்டப்பணிகள் இயக்குனருமான அமுதவல்லி திடீரென ஆய்வு செய்தார். அப்போது விடுதியில் எத்தனை மாணவிகள் தங்கி படித்து வருகின்ற விவரங்களை கேட்டு அறிந்தார்.

மேலும் மாணவிகளிடம் தினமும் வழங்கப்படும் உணவு குறித்துகேட்டு அறிந்தார். பின்னர் சமையலறை, படுக்கையறை, கழிவறை கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து கழிவறை கட்டிடத்தில் சேதமடைந்த கதவுகள், குடிநீர் குழாய் உள்ளிட்டவற்றை சீரமைக்க அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்தமிழ் செல்வன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் மண்டல தாசில்தார் ரவிச்சந்திரன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *