சென்னை டிச, 23
கடந்த முறை 15க்கும் மேற்பட்ட பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2 பொருட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, ஆவின் நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி உள்ளிட்ட பொருட்கள் கடந்தாண்டு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மட்டுமே வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை ஜனவரி இரண்டாம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.