ஈரோடு டிச, 22
ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 941 ஏக்கரும், நடப்பு ஆண்டில் 308 ஏக்கரும் தரிசு நிலங்கள் கண்டறியப் பட்டு அவற்றை விளை நிலங்களாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது ஈரோடு உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ஆசைத்தம்பி, சென்னிமலை வேளாண்மை துணை இயக்குநர் சாமுவேல், வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.