Spread the love

நெல்லை டிச, 22

நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27 ம்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும், இச்சிறப்பு முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டை பிரதியில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *