Spread the love

விருதுநகர் டிச, 21

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.5 கோடி நிரந்தர ஆதார நிதி ஆலை உரிமையாளர்கள் வழங்கும் படி மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

நிரந்தர ஆதார நிதி உரிமையாளர்கள் மேற்படி நல வாரியத்திற்கு நிரந்தர ஆதார நிதி வழங்க பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்ததின் அடிப்படையில் கலெக்டர் ரூ.5 கோடி நிரந்தர ஆதாரநிதி பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்களிடம் பெற்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே அனைத்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் நலவாரிய நிரந்தர ஆதார நிதிக்கு குறைந்த பட்சம் ரூ. 40ஆயிரம் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *