நெல்லை டிச, 15
நெல்லை மாவட்டம் அம்பை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரதான அருவியான மணிமுத்தாறு அருவி உள்ளது, இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழையால் மணிமுத்தாறு அருவிக்கு மேலே உள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதியில் பனி மூட்டம் சூழ்ந்து பரவலாக அவ்வப்போது கனமழை பெய்ததால் மணிமுத்தாறு அருவிக்கான நீர்வரத்து அதிகரித்து கடந்த 30 ம் தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 16 நாட்களாக வனத்துறையினர் அருவியில் குளிக்க தடைவித்து
அருவியை பார்க்க மட்டுமே அனுமதி அளித்திருந்தனர்.
தற்போது மழையின் அளவு குறைந்ததால் அருவில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.