Spread the love

தென்காசி டிச, 15

தென்காசி மாவட்டத்தில் புதிதாக பொதிகை மலை சித்தா பூங்கா , சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் ஆயுஷ் நல்வாழ்வு மையம் அமைக்கப்படுகிறது. இது தொடர்பாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் கபூர், தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் கணேஷ், திட்ட குழு உறுப்பினர் சிவராமன் ஆகியோருடன் இணைந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *