Spread the love

காஞ்சிபுரம் டிச, 14

உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் விழா நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார்.

தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக பல்வேறு ஏரிகள், குளங்கள், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் மழை நீரால் முழுவதுமாக நிரம்பி பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *