Spread the love

புது டெல்லி டிச, 14

கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.10 லட்சம் கோடி வாரா கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மாநிலங்களவையில் பேசிய அவர் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருக்கும் தகவல் படி கடந்த 5 நிதி ஆண்டுகளில் ரூபாய் 10 லட்சம் கோடி வாராக் கடன்களை பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகள் ரத்து செய்துள்ளன. மேலும் ரூ.1,32,036 கோடி வாராக் கடன்கள் உட்பட 6 லட்சம் கோடி கடன்களை மீட்டுள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *