Spread the love

நெல்லை டிச, 13

நெல்லை மண்டலத்தில் பத்திரப்பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மண்டல அளவில் பதிவுத்துறையில் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இதில் சட்ட மன்ற உறுப்பினர் அப்துல்வகாப் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார். இந்த சீராய்வு கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பணியாற்றும் மாவட்ட பதிவாளர்கள், சார்பதி வாளர்கள் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *