தருமபுரி டிச, 12
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த வட்டாரங்கள் அளவிலான பயிற்சி மற்றும் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, இணை இயக்குநர் (மருத்துவம்) சாந்தி, மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் ஜேக்கப் வேதகுமார், மாவட்ட திட்டபிரிவு அலுவலர் மாரிமுத்துராஜ், புள்ளியியல் அலுவலர் ஆதிமூலம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.